நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Sunday 26 January 2014

நீச்சல் குளத்தினால் சருமத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள்!!!


நீச்சல் குளத்தினால் சருமத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள்!!!


இந்த உலகத்தில் உள்ள நிறைய மக்கள் வெப்ப பகுதியின் உஷ்ணத்தில் இருந்தும் உடலை தளர்த்திக் கொள்ள எப்பொழுதும் நீச்சலுக்கு செல்ல விரும்புகின்றனர். என்றாலும், நீச்சல் தனக்குரிய தனி நன்மை பங்குகளை கொண்டுள்ளது, உங்களுக்கு இதை பற்றிக் கண்டிப்பாக தெரியும், இது சில தோல் பிரச்சனைகளையும் இதனுடன் சேர்த்துக் கொண்டுள்ளது. தண்ணீரை சுத்தம் செய்ய உபயோகிக்கும் ஒரு முதன்மை அம்சம் என்னவென்றால் குளோரின். அறியப்பட்ட உண்மை என்னவென்றால் குளோரின் தண்ணீரை சுத்தம் செய்ய உபயோகிக்கும் கிருமிநாசினிகளில் மிகவும் முக்கியமானது. இது பல நாட்களாக உபயோகிக்கப்படும் ஒன்று. நமது தோல் மிகவும் உணர்ச்சி மிக்கது மற்றும் இது தண்ணீரை உறிஞ்சும் திறமை கொண்டது. இதனால் தான், தண்ணீரில் ஏதாவது கலந்து இருந்தால் அதுவும் தோலால் உறிஞ்சப்பட்டு, சில தோல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. 

அதிகபட்ச தோல் பிரச்சனை வெளிப்பாடு என்பது நீச்சலின் மூலம் ஏற்படுகிறது மற்றும் இதுவே அனைத்து பிரச்சனைகளையும் நல்ல விதமாக கண்டறிந்து, அதை திறம்பட மாற்றி அமைக்க காரணமாக அமைகிறது. நீச்சல் தொடர்பாக உலவும் சில தோல் பிரச்சனைகளை குறைத்து தோல் சிதைவுகளையும் குறைத்து மற்றும் தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. நீச்சலால் ஏற்படும் தோல் பிரச்சனைகளுக்கான காரணங்கள்: தோல் நீர்போக்கு தொடர்ந்து செய்யப்படும் நீச்சலால், உங்கள் தோல் அதிக உனர்ச்சிப்பூர்வமாகவும் மற்றும் இது தோல் பிரச்சனைகளை அதிகரிக்கும் திறமையையும் கொண்டுள்ளது. அத்தகைய ஒரு நிலை தோல் நீர்போக்கை ஏற்படுத்தி, இயற்கையான ph சமநிலையில் தோல் இழப்பையும் ஏற்படுத்தி, வறட்சியான மற்றும் சீரற்ற தோல் ஏற்பட காரணமாக அமைகிறது. தோல் வெடிப்பு நீச்சலினால் ஏற்படும் தோல் பிரச்சனைகளில் ஒன்று தோல் வெடிப்பை அதிகரிப்பது. வழக்கமாக செய்யும் நீச்சல் அரிப்பு மற்றும் சிவப்பு தடிப்புகள் வரவும், இயற்கையான தோல் இழப்புகள் ஏற்படவும் காரணமாக அமைகிறது. இயற்கையான சமநிலை உள்ள திரவங்கள் நல்ல ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான தோல் அமைய பொறுப்பு கொண்டுள்ளது.

 இது மேலும் தூண்டுதல்களையும், வலிக்கும் கொப்புளங்களையும் ஏற்படுத்துகிறது. முன்கூட்டியே தோன்றும் வயதான அறிகுறிகள் நீங்கள் இளம் வயதானவர்களாக இருந்து முன்கூட்டியே தோன்றும் வயதான அறிகுறிகளை தவிர்க்க விரும்பினால், பிறகு நீங்கள் தேவையான முன் ஏற்பாடுகளை நீச்சலின் போது எடுக்க வேண்டும். வழக்கமான நீச்சலின் மூலம், நீங்கள் வயது முதிர்ச்சிக்குரிய தோல் பிரச்சனைகளை வளர்கின்றனர். தோல் திரவத்தினால் தெளிவான கோடு, சோர்வு போன்றவை ஏற்படுத்துகிறது. அதிகரித்து வரும் சூரிய ஒளியின் தாக்குதல் தொடர்ந்து அனுபவிக்கும் நீச்சலினால், தோல் பிரச்சனைகளை அதிகரித்து, சூரிய ஒளி தாக்குதலை ஏற்படுத்துகிறது. நீங்கள் நீந்தும் பொழுது, உங்கள் உடல் வறட்சியை எதிர்த்து உங்கள் தோல் நிலை சண்டை போட்டு, நாளுக்கு நாள் வெடிப்புகளை குறைத்து விடுகிறது. ஆனால் இது உணர்ச்சிபூர்வமான சூரிய ஒளி தாக்குதலை ஏற்படுத்துகிறது. எனவே அதிக வெளிப்பாடான சூரிய ஒளி உடலில் வேனிற்கட்டியை அதிகரிக்கிறது. சூடான சவர் குளியலை கட்டுப்படுத்துதல் நீச்சலுக்கு பின்னால் ஏற்படும் சூடான சவர் குளியல் தோலுக்கு ஆரோக்கியமானது அல்ல, இது நீச்சலால் தூண்டப்படும் தோல் பிரச்னையை ஏற்படுத்துகிறது. சூடான நீர் மற்றும் நீராவி குளோரினை தோலில் ஆழமாக ஊடுருவ உதவுகிறது, இது வறண்ட தோல் போன்ற மோசமான தோல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதிகரித்த நச்சுப் பொருட்கள் நீங்கள் நீந்தும் ஒவ்வொரு முறையும், நீங்கள் நச்சுப் பொருட்களை உறிஞ்சும் திறமையை உங்கள் உடலுக்கு ஏற்படுத்துகிறீர்கள்.

 நீச்சலால் ஏற்படும் தோல் பிரச்சனைகளுள் இது அதிக ஆபத்தானது. இது உங்கள் தோலை வறட்சியாக உருவாக்கி மற்றும் வெடிப்புற்ற தோலை, காற்றுக்காலத்தில் ஏற்பட வழிவகுக்கிறது. நீச்சலால் ஏற்படும் தோல் பிரச்சனை பதிப்புகளை புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் அப்பொழுது தான் இதை திறம்பட சரி செய்ய முடியும். உங்களை நீங்கள் பாதுகாத்து மற்றும் உங்கள் தோலை ஒவ்வொரு முறையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களை நீச்சலில் ஈடுபடுத்திக் கொண்டு, நீங்கள் உபயோகிக்கும் குளம் குளோரின் இல்லாமல் அல்லது குறைவான குளோரின் தண்ணீர் கொண்டதாகவும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதனால் மட்டும் தான் நாம் தோல் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

Tuesday 7 January 2014

சர்க்கரை நோயை குணப்படுத்தும் ‘வில்வம்’


இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிடதொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் காற்றுப்புகாத பையில்  போட்டு கட்டினால் அவை அழுகிவிடுகின்றன. எனவே அவற்றை உயிருள்ள உணவுகள் என்கிறோம். அந்த உயிர்சத்து தான் நோய் தீர்க்கும் மருந்தாக  பயன்படுகிறது. அனைத்து பாகங்களும் பயன்தரும் பல தாவரங்கள் உள்ளன. அதில் இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை அனைத்தும் மருந்தாக  பலன்தரும் மணமுடைய இலைகளை பெற்ற முட்கள் உள்ள பெரிய மரம் வில்வம். 


இந்திய சீதோஷ்ண நிலையில் வாழும் இம்மரம் தற்போது அரிதாகவே காணப்படுகின்றன. இது சாம்பல் நிறத்தில் பூ பூக்கும். இலை காரத்தன்மை  கொண்டவை. வேர் கசப்பானது. இதன் தாவரவியல் பெயர் கிமீரீறீமீ Aegle marmelos roxb..   இதன் வேர், இலை, பழம் என அனைத்தும் மருந்தாக  பயன்படுகிறது. இந்த தாவரம் சில நோய்களை முற்றிலும் நீக்குவதோடு, நோய் வராமலும் தடுக்கிறது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட  உளவியல் நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன். 



வில்வ மரத்தின் பாகங்கள் காய்ச்சல், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்கு சிறந்தது. சிறந்த காலரா தடுப்பு மருந்தாகவும் இது  செயல்படுகிறது. வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்து வர கழிச்சல், மூலநோய் நிற்கும். இலையை  இடித்து பிழிந்த சாற்றில் பசுவின் பால் விட்டு கொடுத்தால் சோகை, வீக்கம் போகும். 



வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் வீரியம். ஆண்மை அளிக்கும். வில்வ வேர் பட்டையை பச்சையாக 10 கிராம் எடுத்து ஒரு கிராம்  சீரகத்துடன் அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து கலக்கி வடிகட்டி காலையில் மட்டும் குடித்து வந்தால் தாது பலப்படும். இதன் மூன்று இலைகளை  சுத்தம் செய்து தினமும் மென்று தின்று வந்தால் உட் செல்களிலுள்ள அனைத்து நோய்களும் அகலும். நல்ல ஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும்  உணவு பொருட்களிலுள்ள சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில் கலந்து வலுப்பெற செய்கிறது. 



வேர், பட்டை, இலை ஆகியவற்றில் எதையாவது ஒன்றை சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கல்யாணமுருங்கை சாறு அதே அளவு  எடுத்து கலந்து காலையில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இதுபோல் இதன் காய் தூளை சிறிது வெல்லத்துடன் சேர்த்து உண்டால்  ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பு, செரிமான குறைவால் ஏற்படும் அஜீரண வயிற்று வலி நீங்கும். 



வில்வ பழத்தின் சதையை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால்  சீதபேதி, பசியின்மை குணமாகும். 2, 3 பச்சை இலைகளை தினந்தோறும் காலையில் தின்று வர நீரிழிவு, ஆஸ்துமா நோய்கள் கட்டுப்படுகிறது,  கோழைகட்டாது. வேர்ப்பட்டையை கசாயம் செய்து குடித்து வர காய்ச்சல் தணிகிறது. பழத்தை ஓடு நீக்கி பிழிந்து சர்க்கரை பாகில் காய்ச்சி சர்பத்  செய்து குடித்து வர உடலில் வெப்பம் தணியும்.  இதனால் அதிக வேர்வை ஏற்படுவது குறைகிறது. மலச்சிக்கல் வராது. 



வில்வ மரத்தின் பட்டை மற்றும் பிசின் பல்வேறு நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. மிகச்சிறந்த மூலிகை மரமான  வில்வம் தற்போது சாதாரண இடங்களில் காண்பது அரிதாகிவிட்டது. இது தானாக வளர்வது அரிது. விதைகளை நடவு செய்து தான் வளர்க்க  வேண்டும். பண்டைய காலத்தில் தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வந்த இந்த மரம் தற்போது சிவன் கோயில்கள் மற்றும் சில மூலிகை பண்ணைகளில்  மட்டுமே உள்ளன. இதன் மருத்துவ குணம் குறித்த விழிப்புணர்வு குறைவால் இம்மரம் கைவிடப்பட்டாலும், ஆன்மிக காரணங்களுக்காக  பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களை எளிதாக குணப்படுத்தும் வில்வ மரத்தை அழிவு பட்டியலில் இருந்து மீட்டு அனைத்து இடங்களிலும்  வளரச்செய்ய வேண்டும்.

இரண்டு வேளைக்கு மேல் மூலிகைசாறு வேண்டாம்



வில்வம், அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை,  மஞ்சள்கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை இவற்றில் ஏதாவது ஒரு இலையில் ஒரு கைப்பிடி  அளவு எடுத்து கழுவி மிக்ஸியில் போட்டு 1 டம்பளர் (250 மில்லி) தண்ணீர் விட்டு சட்டினி போல் அரைத்து அதை சுத்தமான வெள்ளை துணியில்  ஊற்றி பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு வெல்லம் அல்லது தேன் சேர்த்து குடிக்கலாம். சில இலைகள் சில நோய்களை  முற்றிலும் குணப்படுத்தும். காலை, மாலை என இரண்டு வேளைக்கு மேல் மூலிகை சாறு குடிக்க கூடாது. நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு நம்  கையில் தான் உள்ளது.



மூலிகை சூப்



வில்வ இலை அல்லது மற்ற மூலிகை இலைகளை சாறு எடுத்து பச்சையாக சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் கீரையுடன் சேர்த்து சமைத்து  சாப்பிடலாம் அல்லது மூலிகை சூப் தயாரித்தும் சாப்பிடலாம். இந்த சாறு ஒருவருக்கு ஒரு நேரத்திற்கு போதுமானது.