நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Sunday 2 October 2011

யார் உண்மையான கேப்டன்? - 1

வணக்கம் ...... நண்பர்களே .........

நம் நண்பனில் இருந்து கேப்டனை சிறப்பு பேட்டி எடுப்பதற்காக அழைத்திருந்தோம் . (சும்மா கற்பனைதான் ..ஹி!!ஹி!!!) கேப்டன் விஜயகாந்த் மட்டும் வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நடந்தது வேறு , நமது அலுவலகத்தில் (??!!!) மிகப்பெரிய கூட்டம் , நான்தான் உண்மையான கேப்டன் என்று கூறிக்கொண்டு பலர் வந்திருந்தார்கள். நல்ல மாட்டிக்கிட்டோம் என்று எண்ணிய படி பேட்டியை துவக்கினோம் (வேறு வழி ). விஜயகாந்த் கோபத்துடன் காணப்பட்டார் அவரிடம் இருந்து பேட்டியை ஆரம்பிப்போம் ..



விஜயகாந்த் : கண்கள் சிவக்கிறது ..... புருவத்தை தூக்கி ... கை விரல்களை மடக்கி நம்முடன் பேச தொடங்குகிறார் ஏன்டா நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு ... கேப்டன் பிரபாகரன் படத்துல நடிச்சு ... வீரப்பன புடிசஅதோட மட்டுமில்லாம , பல படங்கள்ல போலீஸ் அதிகாரியா நடிச்சு பல தீவிரவாதிகள அழிச்சு மக்களை காப்பாத்தி கேப்டன் கிற பேர DEVELOP பண்ணி வச்சிருக்கேன் நீ பேட்டி எடுக்கறேன்னு சொல்லி ஆப் கூட அடிக்காம தெளிவா வந்திருக்கேன். (ஐயோ உளறிட்டேனா ) ஆ...ங்... எனக்கு குடிக்கிற பழக்கமெல்லாம் கிடையாது எப்பவுமே தெளிவாதான் இருப்பேன் ......(உதவியாளர் : சார் இப்பவே உளற ஆரம்பிச்சுட்டிங்க கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க ) ம்... சரி ... பேட்டிய ஆரம்பிங்க .............
நாம் : சார் நீங்கதான் கேப்டன் அப்படின்னு சொல்லறிங்க ஆனா இவுங்கல்லாம் நான் தான் கேப்டன் அப்படின்னு சொல்லி கிளம்பி வந்திருக்காங்களே இதப்பத்தி என்ன நினைக்கிறிங்க .

விஜயகாந்த் : நான்தா அப்பவே சொன்னனே ... எவ்வளவு கஷ்டப்பட்டு பேர டெவலாப் பன்னிருகேன்னு ...... அது மட்டுமில்லாம வீரப்பன நான்தானே பிடிச்சேன் .... வேற எவனாவது பிடிச்சானா?

நாம் : வீரப்பன பிடிச்சது விஜயகுமார் ங்கற போலிஸ் அதிகாரி......... நீங்க பிடிச்சது படத்துல ..........

விஜயகாந்த் : எப்படி பிடிக்கணும்னு நான் சொல்லிகொடுத்தது தான் ....... இல்லனா புடிச்சிருக்க முடியாது ........ அதுமட்டுமில்லாம பாகிஸ்தான் தீவிரவாதிய பிடிச்சிருக்கேன் (?) .. இது தெரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க ......... இவ்வளவு பேசறிங்களே தொப்புள்ள பம்பரம் விடற தைரியம் வேற எவனுக்காவது இருக்கா?? என்ன தவிர கேப்டன் - கிற பேரு யாருக்கும் சொந்தமில்ல .. ஆங் .......

அடுத்ததா மன்சூர் அலிகான் வரார் ..........
நாம் : சார் வணக்கம் .............
மன்சூர் : வணக்கம் .... ஒழுங்கா மாஷா மாஷம் கவர்மென்டுல ஷம்பழத்த ... வாங்கி .. வூட்டுக்கு குடுத்திட்டு இருந்த ... இனி குடுக்க மாட்டங்களே .. புரியல ? அவுங்க குடுப்பாங்க வாங்கறதுக்கு நீஇருக்கமாட்டே...... ஹ!ஹ !!ஹா...........
நாம் : (பயந்துகொண்டே ) என்ன சார் பேட்டி குடுக்க சொன்னா கேப்டன் பிரபாகரன் பட வசனத்த பேசறிங்க ......

மன்சூர் :பேசறதுமட்டுமில்ல உன்ன கொல்லவும் போறேன் .......... (பெரிய துப்பாக்கியை எடுக்கிறார் ... கொக்கு சுடும் துப்பாக்கி என்று நினைக்கிறேன் .......)

நாம் : (நம்ம கதை முடிஞ்சது .... ) சார் சுட்டடதிங்க சார் , நீங்க சொல்லறத அப்படியே பதிவா போ... ட......... ரே ....................ன்ன்ன்ன்.........

மன்சூர் : ஓ.. அப்படியா ? அப்பா எதுக்கு கேப்டன் பேட்டின்னு சொல்லிட்டு என்ன கூப்பிடல ...........

நாம் : அவரு தானே கேப்டன் ......... (விஜயகாந்த் )


மன்சூர் : யாரு ... அந்த விசயகாந்தா .......... டாய்... அந்த ஆளு கேப்டன் பிரபாகரன் ந்டிச்சதுனாலதான் இந்தளவுக்கு பேரும் புகழும்.... நான் தான் அந்த படத்துல மெயின் டைரக்டர் ...... ( உதவியாளர் : சார் அது டைரக்டர் இல்ல கேரக்டர் ) டாய்... வில்லன்ன சும்மாவா அப்படித்தான் தப்பு தப்ப பேசுவேன் ......... அப்பத்தான் நாலுபேர் பயப்படுவான் ( உதவியாளர் : கிளிஞ்சது ..........) அத்தஉடு ... மேட்டருக்கு வரேன் . போலீஸ் டீம்க்கு அந்த ஆளு கேப்டன் னா ... வில்லன் டீம்க்கு நான்தானே டாப்டென் ...(உ : யோவ் கேப்டன் யா ...) ஏதோ ஒன்னு, அந்த படத்துல எனக்கு ஒரு பாட்டுகூட இருக்கு அதுனால நானும் கேப்டன் தான் ... இத யாராவது மாத்தி சொன்னிங்க ... கொன்னு போட்ருவேன்........ ஹ!ஹ !!ஹா........... ஹ!ஹ !!ஹா........... வருட்டா .........?

நாம் :தப்பிச்சம்டா சாமி ......

மற்றவர்கள் பேட்டி நாளை ............

No comments:

Post a Comment

கருத்துக்கள்