நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Wednesday 21 December 2011

சசிகலா நீக்கப்பட்டதின் பின்னணி .........

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு நிச்சயம் ஆபத்து வரும், அப்போது அடுத்த முதல்வராக யாரைப் போடலாம் என்று ஜோசியரிடம் ஜாதகத்துடன் போனதால்தான் சசிகலா குரூப்புக்கு முதல்வர் ஜெயலலிதா ஆப்பு வைத்து விட்டதாக ஒரு தகவல் பரவியுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா இடையிலான பிளவுக்கு என்ன காரணம் குறித்த 'உளவுத் தகவல்கள்' தொடர்ந்து கசிந்தவண்ணம் உள்ளன. பல காரணங்களை இதற்கு அடுக்குகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது போயஸ் தோட்ட வீட்டுக்குள் ஜெயலலிதாவும், சசிகலாவும் மட்டும் இதுவரை தங்கியிருக்கவில்லை, மாறாக ஏராளமான ரகசியங்களும் சேர்ந்து குடித்தனம் செய்துள்ளது தெரிய வருகிறது.

ஜெயலலிதாவிடமிருந்து சசிகலா நீண்ட காலத்திற்கு முன்பே மனதளவில் பிரிய ஆரம்பித்து விட்டதாக கூறுகிறார்கள். குறிப்பாக சொத்துக் குவிப்பு வழக்கில் தனக்கு பாதகமாக ஜெயலலிதா மாறக் கூடும் என்று சசிகலா தரப்பு 'கெஸ்' செய்ய ஆரம்பித்து விட்டதாம். இதனால்தான் அடுத்தது என்ன என்று அட்வான்ஸ்டாக யோசிக்கு ஆரம்பித்துள்ளது இந்தக் கூட்டம்.

இதற்காக ஜெயலலிதாவுக்காக யாருடனெல்லாம் பேசாமல் இருந்தாரோ அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார் சசிகலா. அவர்களுடன் ரகசியமாகவும் சந்தித்துப் பேசியுள்ளார். சிலர் போயஸ் தோட்ட வீடு வரைக்கும் கூட வந்து போயுள்ளனராம். இந்த ரகசிய சந்திப்புகளுக்கு கார்டனில் உள்ள சசிகலா ஆதரவு காவல்துறை அதிகாரிகள் உடந்தை என்று கூறப்படுகிறது.

மேலும் பெங்களூர் கோர்ட்டுக்கு விசாரணைக்கு சசிகலா வந்தபோதும் இந்த ஜெயலலிதாவுக்கு வேண்டப்படாதவர்கள் வந்து சசிகலாவைப் பார்த்து முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளனர். இதெல்லாம் ஜெயலலிதாவின் காதுகளுக்கு அவருக்கு விசுவாசமான அதிகாரிகள் மூலம் போயிருக்கிறது.

அதேபோல சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை மட்டும் பக்குவாகமாக, பாதுகாப்பாக கொண்டு வருவது குறித்து முக்கிய சட்ட நிபுணர் ஒருவருடன் சசி தரப்பு ரகசியமாக ஆலோசனை நடத்தியுள்ளதாம்.

மேலும் திமுக தரப்பைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களுடனும் கூட சசிகலாவுக்குத் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவும் ஜெயலலிதாவை அதிர வைத்துள்ளது.




 

இதை விட ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், ஜெயலலிதாவுக்குப் பிறகு யாரை முதல்வராக்குவது என்ற மந்திராலோசனையில் சசிகலா தரப்பு ஈடுபட்டதுதான். இதற்காக முக்கிய ஜோதிடரையும் போய்ப் பார்த்துள்ளனர். அப்போது இரண்டு அமைச்சர்களின் ஜாதகங்களையும் கொடுத்து இதில் யார் எங்களுக்குச் சாதகமாக இருப்பார்கள் என்றும் ஆலோசனை கேட்டுள்ளனராம்.

இதெல்லாம் ஜெயலலிதாவை கடும் அதிர்ச்சியிலும், ஆவேசத்திலும் தள்ளி விட்டு விட்டது. இதனால்தான் சசிகலா மீது கடும் கோபம் கொண்டு அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக விரட்டியுள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

மொத்தத்தில் சமீப காலமாக தனக்கு வெளியில் உள்ள எதிரிகளை விட உள்ளுக்குள்ளேயே, அதுவும் கூடவே இருப்பது ஜெயலலிதாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதால்தான் தனது கொடநாடு பயணத்தைக் கூட தள்ளிப் போட்டு விட்டு முதலில் வேரறுப்பு வேலைகளில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்பட்டுவிட்டதை 2 வகையாக பார்க்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

1. உண்மையிலேயே அவரை முதல்வர் ஜெயலலிதா வெளியேற்றிவிட்டார்.

2. பெங்களூர் நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வேகத்தை தாமதப்படுத்தவே இந்த அறிவிப்பு, இது தாற்காலிகமாக நீக்கம் என்கிறார்கள்.

இதில் எது உண்மை எது பொய் என்பது, இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா தரப்பினர் அடுத்து தாக்கல் செய்யும் மனுக்களை வைத்து ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.

உண்மையிலேயே சசிகலாவை குடும்பத்தை கூண்டோடு ஜெயலலிதா வெளியேற்றிவிட்டார் என்பதை நம்புவோர் அதற்காக சொல்லும் முக்கிய காரணங்களில் ஒன்று அரசு அதிகாரிகள் இடையே ஏற்பட்ட ஜாதிரீதியிலான மோதல் என்கிறார்கள்.

சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜனுக்கு ஆகியோர் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே முக்கிய பதவிகளில் அமர வைத்ததாகவும், இதற்கு நடராஜனுக்கு நெருக்கமான அதிகாரிகள் துணை போனார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால், சில முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் முதல்வருக்கு மிக நெருக்கமான 'அட்வைசரிடம்' விஷயத்தைச் சொல்ல, அவர் இதை முதல்வருக்கு புரிய வைத்ததாகவும், இதையடுத்தே சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளான சிறப்புத் திட்டங்கள் அமலாக்கல் பிரிவு அதிகாரியான பன்னீர்செல்வம், உளவுப் பிரிவின் தலைவர் பொன்.மாணிக்கவேல், சிவனாண்டி ஆகியோரை முதலில் தூக்கி எறிந்துவிட்டு, அடுத்தடுத்து அதிரடியை முதல்வர் ஆரம்பித்தார் என்கிறார்கள்.

சசிகலா தரப்பை ஒழித்துக் கட்ட இந்த அட்வைசர் நீண்டகாலமாகவே முயன்று வந்தார். ஆனாலும் அவரது முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

இந் நிலையில் தான் பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது சசிகலா தரப்பினர் நடந்து கொண்ட விதம் பல சந்தேகங்களைக் கிளப்ப, அதையே 'மையக் கருவாக' வைத்து, சசிகலா தரப்பினரை காலி செய்துவிட்டார் அட்வைசர் என்கிறார்கள்.

நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜரானபோது அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்க்காத, சசிகலாவின் உறவினர்கள், சசிகலாவும், இளவரசியும், சுதாகரனும் ஆஜரானபோது பாசத்தோடு ஓடி வந்ததாகவும், போயஸ் கார்டனில் தடை விதிக்கப்பட்ட சுதாகரன், தனது சித்தி சசிகலாவுடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வந்து சேர்ந்தன.

இதில் பாதி விஷயங்களை மட்டும் முதல்வருக்கு பாஸ் செய்த உளவுத் துறை, மீதியை 'எடிட்' செய்துவிட்டதாகவும் தகவல் உள்ளது. இந்த விவரங்கள் முதல்வருக்கு முழு அளவில் வேறு சோர்ஸ்கள் மூலம் வந்து சேர்ந்தவுடன் நடந்தது தான் உளவுப் பிரிவு தலைவர் பொன்.மாணிக்கவேலின் நீக்கம் என்கிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கால், பதவிக்கே பிரச்சனை வரலாம் என்ற அச்சம் பரவியுள்ள நிலையில், மன்னார்குடியினர் உளவுப் பிரிவிலும் கூட தலையிட்டு தனது கண்களை மறைப்பதை முதல்வர் உணர, அதிகாரிகள் மூலம் கிடைத்த இதே தகவல்களை வைத்து அட்வைசரும் முதல்வருடன் பேச, சசிகலா தரப்பினருக்கு கட்டம் கட்டப்பட்டது என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு தரப்பினரோ, சசிகலாவின் நீக்கமே ஒரு செட்-அப் தான் என்கிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் அடுத்தபடியாக, தங்களுக்கு சாதமாக காய் நகர்த்த இந்த நாடகம் தேவைப்படுகிறது என்கிறார்கள்.

1996ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் பெயர் கெட்டுப் போய் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றது. இதையடுத்து வந்த திமுக அரசு சசிகலாவை கைதும் செய்தது. உடனடியாக, சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையானவுடன் சசிகலா போய் சேர்ந்த இடம் போயஸ் கார்டன் தான்.

ஆக, இந்தமுறையும் வழக்கை மனதில் வைத்துத் தான் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்